ஆப்நகரம்

12ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம், ஹோட்டல் அறையில் அரங்கேறிய கொடுமை

ஹரியானாவில் 12ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 26 Feb 2021, 3:30 pm
ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளி முடிந்து ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்கு சென்ற பெண் மாலை வரை வீடு திரும்பவில்லை. வழக்கமாக மாணவி 4.30 க்குள் வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். இதனால் பதட்டமடைந்த மாணவியின் தந்தை ஆசிரியர்களுக்கு போன் செய்து பார்த்தார்.
Samayam Tamil கோப்புப்படம்


அப்போது மாணவி இன்று வகுப்பில் கலந்துகொள்ளவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து உறவினர்கள் சிலர் அக்கம் பக்கத்தில் தேடும் முயற்சியி ஈடுபட்டனர். அப்போது. மாலை 7 மணி அளவில் பராரா என்ற பகுதியில் மாணவி இரண்டு வாலிபர்களுடன் இரு சக்கர வாகனத்தில் செல்வதை கண்டனர். உடனே அவர்களை மடக்கி பிடித்து மாணவியை மீட்டனர். அப்போது, மாணவி மிகவும் சோர்வான நிலையில் இருந்ததால் வாலிபர்கள் ஏதாவது செய்திருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. அதாவது பாதிக்கப்பட்ட மாணவி கடந்த பிப்ரவரி 22ம் தேதி பள்ளி முடிந்ததும் தனது தோழியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த தோழியின் உறவினரான அஜய் என்ற வாலிபர் இருந்துள்ளார். அப்போது, மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு சோர்வடைந்துள்ளார். இதையடுத்து, மாணவியை அவரது வீட்டில் சேர்த்து விட்டு வருவதாக கூறி பைக்கில் ஏற்றுக்கொண்ட அஜய், அங்கிருந்து உம்ரி சவுக் என்ற இடத்தில உள்ள ஹோட்டலுக்கு கொண்டு சென்றுள்ளார்.

மனைவிக்கு தகாத உறவு இருப்பதை தெரியாமலேயே உயிரை விட்ட கணவன், சென்னை துயரம்

அங்கு ஏற்கனவே, அஜய் நண்பர்கள் நிதின், அபிஷேக், ஒரு சிறுவனும் இருந்தனர். அபிஷேக் என்ற வாலிபர் அந்த ஹோட்டலில் ஊழியராக உள்ளார். இந்நிலையில், மாணவியை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து நான்கு பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர் இதையடுத்து சிறுமியை வீட்டுக்கு கொண்டு செல்லும்போது உறவினர்களிடம் பிடிபட்டனர். இதுகுறித்து வழக்கு செய்த போலீசார் முதற்கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளனர். எஞ்சிய ஒரு வாலிபரை தேடி வருகின்றனர். தொடர்ந்து அந்த மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி