ஆப்நகரம்

சென்னையில் 1,300 கிலோ கஞ்சா தீயில் போட்டு அழிப்பு... காவல்துறை அதிரடி..!

சென்னையில் 1,300 கிலோ கஞ்சா போலீஸ் கமிஷனர் முன்பு அழிக்கப்பட்டது.

Samayam Tamil 26 Jun 2022, 1:42 pm
சென்னையில், 68 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,300 கிலோ கஞ்சா மற்றும் 30 கிராம் ஹெராயின் ஆகியவற்றை சென்னை காவல்துறையின் சிறப்புக் குழு தீயில் போட்டு அழித்தது. தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் `ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் காவல்துறை அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Samayam Tamil operation ganja


மேலும், கஞ்சா விற்பனை குறித்து சமூக அக்கறை கொன்றவர்கள் ரகசிய தகவல் கொடுக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

பல இடங்களில் கஞ்சா கைது சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே சூழலில் சென்னையில் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள சுமார் 1,300 கிலோ கஞ்சாவை அழிக்கக்கோரி சென்னை முதன்மை சிறப்பு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, 2 கோடி மதிப்புள்ள கஞ்சா, ஹெராயின் ஆகியவற்றை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், 489 பள்ளிகளில் போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும், சமூகத்தில் போதைப்பொருளின் தாக்கம் குறித்து மதிப்பிடுவதற்கு மாநிலம் முழுவதும் போதைப்பொருள் ஆய்வு நடத்தப்படும் என்றும் கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில், மறுவாழ்வு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி