ஆப்நகரம்

காஷ்மீரில் பயங்கரம்: 14 பாஜக நிர்வாகிகள் சுட்டுக்கொலை..!

குல்காம் மாவட்டத்தில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் உட்பட மூன்று பாஜக நிர்வாகிகள் தீவிரவாதிகளால் கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Oct 2020, 3:20 pm
தென் காஷ்மீரின் குல்காமில் உள்ள ஒய் கே போரா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பாஜகவின் இளைஞர் பிரிவின் மாவட்ட பொதுச் செயலாளர் ஃபிடா உசேன் யடூ மற்றும் இரண்டு கட்சி உறுப்பினர்களான உமர் ரம்ஜான் ஹஜாம் மற்றும் உமர் ரஷீத் பீக் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
Samayam Tamil kulgam attack


அதில் சம்பவ இடத்திலேயே உசேன் யடூ இறந்துவிட்ட நிலையில், மற்ற இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாக குல்காம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாத தாக்குதல் குறித்து குல்காம் போலீசார் வசம் பதிவு செய்துள்ள நிலையில், ஜம்மு & காஷ்மீர் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் கூட்டுக் குழு ஒய் கே போரா பகுதியை சுற்றி தேடுதல் பணிகளைத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் ஜம்மு & காஷ்மீரில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பாகக் கருதப்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ஜம்மு & காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா வௌியிட்ட அறிக்கையில், ''வன்முறையில் ஈடுபடுபவர்கள் மனித குலத்தின் எதிரிகள். இதுபோன்ற கோழைத்தனமான செயல்களை நியாயப்படுத்த முடியாது’ என்று கூறியுள்ளார்.

தாயை வெளியே தள்ளிவிட்டு, சிறுமியுடன் உள்ளே வாலிபர்..! சிதம்பரத்தில் பரபரப்பு

தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''எங்கள் கட்சியை சேர்ந்த மூன்று இளம் நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டிக்கிறேன். அவர்கள் ஜம்மு-காஷ்மீரில் சிறந்த பணிகளை மேற்கொண்டிருந்தனர். துக்கமான இந்த நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்'' என பதிவிட்டுள்ளார்.

கடந்த 6 மாதங்களில் மட்டும் காஷ்மீரில் நடந்துள்ள தாக்குதல்களில் 14 பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி