ஆப்நகரம்

திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக் கொலை..!

திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Jul 2020, 7:31 pm
திருச்சி மாவட்டம் அதவத்தூர்பாளையத்தைச் சேர்ந்த 9 ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. சோமரசம் பேட்டைக்கு உட்பட்ட அவத்தூர்பாளையத்தில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் எறிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil 9th student girl killed


சம்பவம் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியை கொலை செய்தவர்களை தீவிரமாகி தேடி வருகின்றனர்.

7 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் கொடுமை - சிக்கிய 65 வயது முதியவர்!

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியின் உச்சத்தை தந்துள்ளது. கூடுதல் விவரங்களை விரைவில் தருகிறோம்.

அடுத்த செய்தி