ஆப்நகரம்

வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இரவு முழுக்க காட்டில் இருந்த சிறுமி..!

உத்தரகாண்ட் அருகே 14 வயது சிறுமியை கடத்தி காட்டுக்குள் வைத்து கூட்டு வன்கொடுமை செய்தவர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Samayam Tamil 5 Dec 2020, 9:28 pm
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது பெற்றோர் தினமும் வேலைக்கு சென்று விடும் நேரத்தில் அவர்கள் திரும்பி வரும் வரைக்கும் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அதனை கவனிந்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் கடந்த புதன்கிழமை அன்று சிறுமியை வீடு புகுந்து கடத்தியுள்ளனர்.
Samayam Tamil file pic


பின்னர் அப்பகுதியில் உள்ள காட்டுக்குள் சிறுமியை கொண்டு சென்று மாலை வரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதையடுத்து, இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதற்கிடையில் சிறுமியை காணவில்லை எனக்கூறி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

பின்னர் மறுநாள் காலை காட்டு வழியே வந்த சிலர் சுயநினைவின்றி படுத்துக்கொண்டிருந்த சிறுமியை பார்த்து பேரதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சம்பவத்தை சிறுமியின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். பதறியடித்து கொண்டு வந்த சிறுமியின் பெற்றோர் மகளை மீட்டு அருகிலிருக்கும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காதலனுக்கு முதலிரவு, படுக்கை அறையில் பரபரப்பு..! அதிர்ந்து போன உறவினர்கள்

தொடர்ந்து சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளதால் அவர்களை தேடி வருகின்றனர். வட மாநிலங்களில் நிலைகுலைய வைக்கும் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டாலும் இதுபோன்ற செய்திகள் அடுத்தடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை தடுக்க புது புது சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சிறார்களின் ஆபாச படங்களை பார்ப்பதும், பகிர்வதும் குற்றம் என கருதி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், சிறுமிகள் தொடர்ச்சியாக வேட்டையாடப்படுவது குற்றம் செய்பவர்களின் கொடூர மனநிலையை வெளிப்படுத்துகிறது.

அடுத்த செய்தி