ஆப்நகரம்

இரவு முழுக்க விபச்சாரம்... இது மும்பை உல்லாசம்... 17 பெண்கள் மீட்பு..! வீடியோ...

மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் இயங்கி வந்த பாரில் ரகசியமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 நடன அழகிகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Dec 2021, 9:49 pm
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டான்ஸ் பார்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கி ஒரு டான்ஸ் பாரில் நான்கு பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மும்பையில் செயல்பட்டு வரும் பிரபல தீபா பார் இரவு முழுவதும் இயங்குவதாகவும், விதியை மீறி கூடுதலாக நடன அழகிகளை சேர்த்துக்கொண்டு ஆபாசமாக ஆட வைப்பதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அந்தேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளது.
Samayam Tamil mumbai dance girls prostitution


அதன் பேரில் சம்மந்தப்பட்ட பாருக்கு சென்ற மும்பை காவல்துறையின் சமூக சேவைப் பிரிவு அதிரடி சோதனையில் ஈடுபட்டது. முதலில் பாருக்குள் சந்தேகப்படும்படியான சூழல் தென்படவில்லை. அதனை தொடர்ந்து பார் கட்டட பேஸ்மெண்ட் சுவரில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியை சோதனை செய்தபோது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த கண்ணாடியை அகற்றிய பின்னர் தான் அதற்குள் பாதாள சுரங்கம் இருப்பது அம்பலமானது.


மேலும், அந்த சிறிய அறைக்குள் பெண்கள் அடைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அந்த சிறிய ஓட்டைக்குள் ஒருவர் மட்டும் அதுவும் உட்கார்ந்தபடியே குனிந்துகொண்டுதான் செல்ல முடியும். இந்த சூழலில், போலீசார் உள்ளே இருப்பவர்களை எச்சரித்து அழைத்ததை தொடர்ந்து 17 நடன அழகிகள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.

மூன்று மனைவிகள்... தகாத உறவு வேறு... 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன்..!

இந்த சோதனையின் முடிவில் பார் மேலாளர் மற்றும் காசாளர் உட்பட மூன்று ஊழியர்கள் மீது அந்தேரி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட பெண்களை பார் நிர்வாகம் விபச்சாரத்தில் ஈடுபடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த உல்லாச பாரில் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வதும் , லட்ச கணக்கில் பணத்தை செலவு செய்துவிட்டு சென்றுள்ளனர் என்பதும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி