ஆப்நகரம்

காஞ்சிபுரத்தில் பேருந்து விபத்து: 16 பெண்கள் உட்பட 17 பேர் காயம்..!

காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனர், 16 பெண்கள் உட்பட 17 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.

Samayam Tamil 17 May 2022, 6:26 pm
காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் பகுதியில் பாக்ஸ்கான் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் தங்கி உள்ளனர். இந்த நிலையில், மதிய ஷிப்ட்டில் பணி செய்யும் பெண் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு தனியார் நிறுவனப் பேருந்து சுங்குவார்சத்திரம் பகுதியிலுள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது.
Samayam Tamil foxconn company staff


அப்போது, செவிலிமேடு பாலாற்று மேம்பாலம் அருகே வந்தவாசி மார்கமாக சென்ற லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பேருந்தில் பயணம் செய்த 16 பெண்கள் காயம் அடைந்தனர்.

மேலும், தனியார் பேருந்தின் ஓட்டுநர் காயமடைந்தார். தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம்பட்டவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

இந்த விபத்தினால் சுமார் அரை மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி