ஆப்நகரம்

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொன்ற 17 வயது மகள்... தூத்துக்குடியில் கொடூரம்

தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் இணைந்து தாயை குத்தி கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Mar 2022, 1:22 pm
தூத்துக்குடி வண்ணார் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியலெட்சுமி. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக மாடசாமியை விட்டு பிரிந்து முனியலட்சுமி தனியாக தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
Samayam Tamil thoothukudi news


முனியலெட்சுமியின் மூத்த மகளான ஈஸ்வரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயது இவருக்கு அந்த பகுதியில் உள்ள பல்வேறு வாலிபர்களுடன் பழக்கம் இருந்துள்ளது. இது தொடர்பாக தாய் மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ஈஸ்வரி தனது ஆண் நண்பர்களான சங்கர், தங்கம், கோடாரி உள்ளிட்டோருடன் இணைந்து தனது தாய் முனியலெட்சுமியை கழுத்தை நெரித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த தென்பாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.‌

மாணவியை கடத்தி திருமணம்: தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம்!

விசாரணையில் தாயை கொலை செய்தது ஈஸ்வரிதான் என தெரிய வந்தது. தொடர்ந்து அவரை தென்பாகம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தகாத பழக்கத்தை கண்டித்ததால் பெற்ற தாயை மகள் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி