ஆப்நகரம்

திருச்சியில் கர்ப்பமான நிலையில் சிறுமி தற்கொலை..! காரணம் போலீசா?

திருச்சி அருகே 17 வயது சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jul 2020, 8:52 pm
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கவரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமி புதுக்கோட்டையைச் சேர்ந்த உறவினரான ராம்கி (22) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
Samayam Tamil trichy minor girl suicide


இந்நிலையில் திருமணம் ஆசைகாட்டி அந்த வாலிபர் சிறுமியை ஆள் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கே சென்று பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சிறுமி 6 மாதம் கர்ப்பமடைந்துள்ளார்.

சிறுமி கர்ப்பம் அடைந்ததை அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சிறுமியை கடிந்துகொண்ட பெற்றோர் பின்னர் ராம்கிக்கே மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

அதற்காக சிறுமியின் பெற்றோர் ராம்கியின் வீட்டுக்கு சென்று திருமணம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் , திருமணத்துக்கு முன்னரே கர்ப்பம் ஆகிய பெண்ணுக்கு எங்களுடைய மகனை தர மாட்டோம் என மறுத்ததுடன் பெற்றோரை அவதூறாக பேசியுள்ளனர்.

'' நீ ரொம்ப அழகா இருக்க'' கல்லூரி மாணவிக்கு வலை விரிக்கும் சென்னை மாநகராட்சி எஞ்சினியர்... ஆடியோ!

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் 6 மாதங்களாக காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யாமல் தட்டி கழித்து வந்துள்ளனர்.

இதனால் மன வேதனையுடன் இருந்து வந்த பெற்றோரை அணுக முடியாததாலும், காதலிப்பதாக கூறி கடைசியில் ஏமாற்றியததாலும், விரக்தி அடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்போது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாகிய ராம்கி தாமாக வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ள நிலையில், போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி