ஆப்நகரம்

கோவையில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு நேர்ந்த மரணம்... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..!

கேரளாவில் 18 வயதான கல்லூரி மாணவி நாய் கடித்து ரேபிஸ் சிகிச்சை எடுத்த வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 30 Jun 2022, 6:15 pm
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி (18). இவரில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பிசிஏ) இளங்கலைப் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த கடந்த மே 30ஆம் தேதி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது வளர்ப்பு நாய் ஒன்று ஸ்ரீலட்சுமியை கடித்துள்ளது. இதனால் ஸ்ரீலட்சுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. அதன்பின்னர் மாணவி ரேபிஸ் அறிகுறிகள் ஏதுமில்லாமல் நலமாகவே இருந்துள்ளார்.
Samayam Tamil மாணவி ஸ்ரீலட்சுமி


இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஸ்ரீலட்சுமிக்கு காய்ச்சல் அடித்துள்ளது. இதனால் பாலக்காட்டுக்கு சென்ற மாணவியை மங்காராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

அங்கு பரிசோதித்ததில் ஸ்ரீலட்சுமிக்கு ரேபிஸ் இருப்பது தெரிய வந்தது. ரேபிஸ் சிகிச்சை கொடுத்தும் உடல்நலம் மோசமாகிவிட்டதால் இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவியை திருச்சூர்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ரீலட்சுமி இன்று அதிகாலை (ஜூன் 30) பரிதாபமாக உயிரிழந்தார்.

120 இளம்பெண்கள்... 1900 படங்கள்... ஆபாச ரோமியோ காசியின் திடுக்கிடும் தகவல்

மாணவியை கடித்த நாயின் உரிமையாளரிடம் விசாரித்துள்ளனர். அதில், கடந்த மே 29 அன்று நாய் அதன் உரிமையாளரைக் கடித்ததாகவும், ஒரு நாள் கழித்து, ஸ்ரீலட்சுமியைக் கடித்திருப்பதும் தெரிய வந்தது. இதில், உரிமையாளரின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி