ஆப்நகரம்

10ம் வகுப்பு மாணவியை ஆள் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று பலாத்காரம் - புள்ளிங்கோ கைது

மரக்காணம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 4 Aug 2022, 7:06 pm
சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil pocso


இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன் மகன் ஆனந்தராஜ் (வயது 19). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் ஆனந்தராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாணவிக்கு ஆனந்தராஜ் காதல் வார்த்தைகளை கூறி மயக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று ஆனந்தராஜ் மரக்காணம் அருகே உள்ள தீர்த்தவாரி கடற்கரை அருகே யாரும் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் ஆனந்தராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து ஆனந்தராஜ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

யார் அந்த அமைச்சர்கள்? புட்டு புட்டு வைத்த சித்ரா தரப்பு..! கோர்ட்டில் வெடித்த சரவெடி..!

penetrative sexual assault

போக்சோவில் பிரிவு 3ன் படி, சிறார்களை வன்கொடுமை செய்தாலோ, வேரோரு நபரை வைத்து செய்ய தூண்டினாலோ, குழந்தையின் உடலின் எந்தப் பகுதியிலும் ஊடுருவலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டாலோ அது பாலியல் வன்கொடுமை என்று கருதப்படுகிறது. இந்த குற்றத்திற்காக ஒருவருக்கு குறைந்தபட்சம் 7 வருட சிறை தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரையிலும் நீதிமன்றம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி