ஆப்நகரம்

சார்...நான் படிக்கணும்... திருமணத்தை நிறுத்த சைல்டு லைனை அணுகிய 19 வயது இளைஞர்

திருமணத்தை நிறுத்தக்கோரி சைல்டு ஹெல்ப் லைனை தொடர்பு கொண்ட ராஜஸ்தான் இளைஞரின் செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Samayam Tamil 29 Nov 2021, 6:03 pm
ராஜஸ்தானில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த தனது திருமணத்தை நிறுத்தக்கோரி 19 வயது இளைஞர் ஒருவர் சைல்டு லைன் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
Samayam Tamil rajasthani boy stopped marriage


ராஜஸ்தான் மாநிலம் டவுசா மாவட்டம் சிக்ராய் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவர் 12ஆம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) முகூர்த்தநாள் குறிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இளைஞர் சைல்டு ஹெல்ப் லைனை தொடர்பு கொண்டு, '' நான் மேற்படி படிக்க விரும்புவதால், எனது திருமணத்தை நிறுத்த வேண்டும்'' என கூறியுள்ளார்.

திருமணம் செய்துகொள்ள சட்டபூர்வமாக இளைஞருக்கு 21 வயது நிரம்பாததால், உடனே இந்த விவகாரத்தில் தலையிட்ட ராஜஸ்தான் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாவட்ட நிர்வாகம் உடனே அந்த திருமணத்தை நிறுத்தக்கோரி ஆணையிட்டது.

மேலும், இதுகுறித்து பேசிய மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரி சங்கீதா பெனிவால், மாநிலத்தில் முதன்முறையாக ஒரு இளைஞர் தனது திருமணத்தை நிறுத்தக்கோரி ஆணையத்தை அணுகியிருப்பது வரவேற்கத்தக்கது என நெகிழ்ந்தார்.

'பெரிய அளவில் பிராத்தல்'... டிக்டாக் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் அஞ்சுகிறதா?

முன்னதாக ராஜஸ்தானில் திருமண வயதுக்கு முன்னரே நடந்த திருமணங்களின் சதவீதம் படிப்படியாக குறைந்து வருவதை தேசிய குடும்ப நல ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கிராம புறங்களில் நடக்கும் ஆணின் திருமணங்கள் 44 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், பெண்களில் 18 வயதுக்கு முன்னரே நடக்கும் திருமணங்கள் 10 சதவீதம் குறைந்து 25 சதவீதம் சரிந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி