ஆப்நகரம்

கோவையில் கஞ்சா விற்று வந்த பெண் தப்பியோட்டம், 2 பேர் கைது.!

சரவணம்பட்டி அருகே ஐ.டி நிறுவனம் அமைந்துள்ள பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 9 Oct 2019, 3:58 pm
கோவை மாவட்டம் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவானந்தபுரம் ,சின்னவேடம்பட்டி ஆகிய பகுதியில் கல்லூரிகள் ஐடி நிறுவனங்கள் அதிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இளம்பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
Samayam Tamil 3


அன்று தியானம், இன்று மயக்கம்..! நிர்மலா தேவிக்கு நடப்பது என்ன?

இப்பகுதியில் மர்ம ஆசாமிகள் சிலர் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக சரவணம்பட்டி போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து போலீசாரும் தீவிர சோதனை நடத்தி ஏற்கெனவே கஞ்சா விற்றுவந்து சிலரை கைது செய்துள்ளனர்.

தாதாவிற்காக மோதிய கோஷ்டிகள்; ரவுடி சகோதரனுக்கு நடந்த விபரீதம்- காஞ்சி பயங்கரம்!

இதற்கு பிறகும் நேற்று மாலை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் போலீஸார் சோதனை மேற்கொண்டபோது கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமநாதன் (26), கோவை மருதமலை பி.என்.புதூரை சேர்ந்த அரூரன்(23) என தெரியவந்துள்ளது. இதில் ராமநாதன் ஏற்கனவே பலமுறை கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பழைய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

திருடுவதே தப்பு..! இதுல போலீசுக்கே கத்தி.. தேவையா இந்த மாவுக்கட்டு..

போலீஸாரின் வேட்டையில் இவர்களுடன் இருந்த கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மஞ்சு என்ற பெண் தப்பி சென்றார். மேலும் அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதாகியுள்ள ராமநாதன், அரூரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி