ஆப்நகரம்

பெண் குரலில் பேசி நடித்து பெண்களிடம் கொள்ளையடித்து தப்பித்தவர்கள் அதிரடி கைது

சமூக வலைதளம் மற்றும் மொபைல் மூலம் பெண்களிடம் பேசி நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேர் கைது.

Samayam Tamil 4 May 2019, 4:45 pm
செல்வத்தை பெருக்குவதாக ஆசை வார்த்தை கூறி பெண்களை ஏமாற்றிய மாற்றுத்திறனாளியை நண்பருடன் சேர்த்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Samayam Tamil பெண் குரலில் பேசி பெண்களிடம் கொள்ளையடித்த நபர்கள் கைது
பெண் குரலில் பேசி பெண்களிடம் கொள்ளையடித்த நபர்கள் கைது


விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண்களிடம் சமூகவலைதளம் மற்றும் மொபைல் போன்களில் பேசி செல்வத்தை பெருக்குவதாக கூறி, அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை திருடி இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளை தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து பெண்களின் செல்ஃபோனில் நடத்தப்பட்ட சோதனையில் கொள்ளை சம்பவத்தை ஈடுபட்ட நபர்களை காவலர்கள் கண்டறிந்தனர்.

சாத்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி நபரான ராஜ்குமார் மற்றும் அவருடைய நண்பர் நவீன்குமார் ஆகிய இருவரும் வசதியான பெண்களை கண்டறிந்து மேஜிக் வாய்ஸ் கால் ஆப் மூலம் பெண் குரலில் பேசி பழகியுள்ளனர்.

அவர்களிடம் இருக்கும் செல்வத்தை அதிகரிப்பதாக கூறி நகை மற்றும் பணத்தை எடுத்து வரச்செய்து கோயிலில் வைத்து வழிபாட நடத்து கூறியுள்ளனர். அப்போது நகை மற்றும் பணத்தை இவர்கள் இருவரும் திருடிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், குற்றவாளிகள் ராஜ்குமார் மற்றும் நவீன்குமாரிடமிருந்து 61 சவரன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி