ஆப்நகரம்

கொடைக்கானலில் 22 வயது இளம்பெண் மரம் மரணம்... திருமணம் முடிந்து 3 மாதத்தில் அதிர்ச்சி...

கொடைக்கானலில் திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு

Samayam Tamil 26 Jun 2022, 10:50 am
5 வருடம் காதலித்து கரம் பிடித்த 22 வயது பட்டதாரி இளம்பெண் திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணை நடந்து வருகிறது. தற்போது வரை உரிய விசாரணை நடைபெறவில்லை என கூறி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்.
Samayam Tamil மோனிஷா
மோனிஷா


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் சந்திரன். இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மோனிஷா. எம். காம். பட்டதாரியான மோனிஷாவும் கொடைக்கானல் வட்டகணல் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஆரோக்கியசாமி என்பவரும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி 21ந்தேதி கொடைக்கானலில் இருவருக்கும் திருமணம் மிக மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி அன்று மோனிஷாவுக்கு வீட்டுக்கு போன் செய்த ஆரோக்கியசாமி குடும்பம், உங்களுடைய மகள் தூக்குப்போட்டு இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற பெண்ணின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் மோனிஷாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். அப்போது, மோனிஷாவின் கழுத்து மற்றும் உடலில் காயம் இருந்ததாக தெரிகிறது.

இதனால் சந்தேகம் பெற்றோர், தூக்குப்போட்டு இறக்கும் அளவிற்கு தனது மகள் கோழை இல்லை என்றும் தனது மகளை கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொலை செய்துவிட்டனர்... தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

கோயம்பேட்டில் விபச்சாரம்... புதருக்குள் கும்கும்... கும்மிருட்டில் 4 பெண்களுடன் நடந்த மேட்டர்

திருமணமாகி மூன்றே மாதத்தில் 22 வயது பட்டதாரி இளம்பெண் மர்ம மரணம் குறித்து கொடைக்கானல் ஆர்டிஓ விசாரணை நடைபெற்றது. ஆனால், மோனிஷா இறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை... விசாரணை பற்றியும் தெரிவிக்காததால் இன்று அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் காவல்துறை மற்றும் ஆர்டிஓ விசாரணை என்ன ஆனது என்று கோஷங்கள் எழுப்பி கொடைக்கானல் நாயுடுபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்றதால் சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காவல்துறையினர் இளம் பெண்ணின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 24 மணி நேரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ததாகவும் கண்டிப்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறியதை அடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

அடுத்த செய்தி