ஆப்நகரம்

சட்ட விரோதமாக மது விற்பனை; 24 பேர் கைது..!

ஈரோட்டில் ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 2 Oct 2022, 3:19 pm
ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியான இன்று(2ம் தேதி) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Samayam Tamil erode news


இதையொட்டி, சிலர் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் நேற்று எஸ்.பி. சசி மோகன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

இதில், மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைது செய்து, 221 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அடுத்த செய்தி