ஆப்நகரம்

மருமகளை கொன்ற மாமியார் சித்திரவதை... திருவாரூரில் துயர சம்பவம்..!

திருவாரூரில் வரதட்சனை கொடுமையால் தீக்குளித்த பெண் மரணமடைந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.

Samayam Tamil 23 Jun 2022, 2:04 pm
திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி நீலாவதி நகரை சேர்ந்தவர் சூர்யா (30). இவரது மனைவி காளியம்மாள் (25). இவர்களுக்கு திருமணமாகி நான்கரை ஆண்டுகள் ஆன நிலையில் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவின் தாய் இறந்துவிட்டதால், அவரது தந்தை ரவி, சுசீலா என்ற பெண்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளர்.
Samayam Tamil தற்கொலை செய்துகொண்ட பெண்


இந்நிலையில், காளியம்மாளை உரிய வரதட்சணை கொடுக்கவில்லை என சுசீலா கொடுமை செய்ததாகவும் அவரை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த காளியம்மாள், தனது குடும்பத்தினரிடம், தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக தொலைபேசியில் கூறியுள்ளார். குடும்பத்தினர் அவரை சமாதானம் செய்துள்ளனர்.

அயோத்தியில் மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவனுக்கு சரமாரி அடி உதை... வைரல் வீடியோ..!

இருப்பினும் காளியம்மாள் மன அழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் சம்பவத்தன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அவரது கணவர் சூர்யா மனைவியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், அங்கு காளியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, காளியம்மாள் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மருத்துவக்கல்லூரி பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வரதட்சணை கேட்டு கொடுமை செய்த சுசீலா மற்றும் சூர்யாவின் தந்தை ரவி ஆகியோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என தெரிவித்தனர்.

அடுத்த செய்தி