ஆப்நகரம்

பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான மேலும் மூவர் கைது

ஒரு சமூகம் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியீட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் மற்றும் வன்முறைக்கு காரணமாக மேலும் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 29 Apr 2019, 9:27 am
ஒரு சமூகம் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியீட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் மற்றும் வன்முறைக்கு காரணமாக இருந்த சிங்கப்பூரில் பணிபுரிந்த இருவர் உள்ளிட்ட 3 பேர் கைதாகி சிறையில் உள்ள நிலையில் மேலும் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil arrest


தற்போது கலவரத்துக்கு காரணமாக இருந்த ஆடியோ பகிரப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள மூன்று பேரும் 17, 18, 19 வயதுடைய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த 18ம் தேதி இரவு ஒரு சமூகம் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டதையடுத்து அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 19ம் தேதி அந்த போராட்டமானது வன்முறையாக மாறியது. குறிப்பாக பொன்னமராவதி காவல்நிலையத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்ட சமூகத்தினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் 5 போலீசாரின் வாகனம் மற்றும் 3 போலீசார் காயமடைந்தனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அன்றைய தினமே பொன்னமராவதி உள்ளிட்ட 49 வருவாய் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் பொன்னமராவதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியீட்டு அவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டமானது தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னமராவதியில் இயல்பு நிலை திரும்பியதால் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ஒரு சமூகம் குறித்து இழிவாகப் பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு நபர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்ட சிக்னல் வெளிநாடுகளை காட்டியதால் கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் தலைமை நிறுவனத்தை புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறையினர் வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டவர் யார் என்பது குறித்து விளக்கம் கேட்டு அவர்கள் உதவியையும் நாடினார்.

இந்நிலையில் ஒரு சமூகம் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டது பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிசல்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பதும் செல்வகுமார் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த செல்வகுமாரை தமிழகத்திற்கு வரவழைத்து சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான மேலும் மூவர் கைது

மேலும் செல்வகுமாருக்கு உதவியாக இருந்த பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் வசந்தையும் போலீசார் கைது செய்தனர். மேலும் நேற்றைய தினம் கலவரத்திற்கு காரணமாக இருந்த ஆடியோவில் பேசிய புதுக்கோட்டை மாவட்டம் நெருஞ்சி குடியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரை சிங்கப்பூரில் இருந்து வரவழைத்து திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். மேலும் கைது செய்த மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஒரு சமூகம் குறித்து இழிவாகப் பேசிய ஆடியோ முதன்முதலில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில்தான் பகிரப்பட்டது என்று போலீசாருக்கு தெரிய வந்ததையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான மேலும் மூவர் கைது

அந்த விசாரணையில் பேராவூரணி தொகுதிக்குட்பட்ட தொந்துபுலிக்காடு பிரகாஷ்(17), சீக்கன்காடு பாலாஜி (19), சேதுபாவாசத்திரம் சபரி (18) என்ற மூவர் தான் முதன் முதலில் கலவரம் உண்டாக காரணமாக இருந்த ஆடியோவை பரப்பியது என்று போலீசாருக்கு தெரியவந்தது எடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் புதுக்கோட்டை ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான மேலும் மூவர் கைது


விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் கைதாகியுள்ள மூன்று பேரும் 17 18 19 வயதுடைய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி