ஆப்நகரம்

ஆந்திராவில் 3 பேர் படுகொலை; ரத்தத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம்

ஆந்திரா மாநிலத்தில் 3 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவரும் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல் துறையினர் விசாரணை.

Samayam Tamil 16 Jul 2019, 1:56 pm
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கோவில் ஒன்றில் 3 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil Death Body


ஆந்திரா மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தின் கோர்திகோட்டா என்ற பகுதியில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள், கோவில் அருகே கொலை நடந்திருப்பதாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் பார்த்தபோது அப்பகுதியில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கொலை செய்யப்பட்டவர்கள் சிவராமி ரெட்டி (70), கமலம்மாள் (75), சத்ய லக்ஷம்மா (70) என்பது அடையாளம் காணப்பட்டது. மூவரின் கழுத்து பகுதியில் ஒரே அளவில் வெட்டப்பட்டு இவர்களது ரத்தம் கோவிலினுள் உள்ள சிவலிங்கம், கோவில் வாசலில் உள்ள பாம்பு புற்றில் தெளிக்கப்பட்டிருந்ததால் இவர்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளூர் மக்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி