ஆப்நகரம்

சிவகங்கை பெண்கள் இரட்டை கொலை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது..!

தேவகோட்டை அருகே கண்ணன்கோட்டை கிராமத்தில் தாய் ,மகள் கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அதே ஊரை சேர்ந்து மூன்று பேர் கைது

Samayam Tamil 9 Mar 2023, 1:31 pm
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணன்கோட்டை கிராமத்தில் கடந்த 10.1.23 அன்று இரவு தாய் கனகம், மகள் வேலுமதி மற்றும் வேலுமதியின் மகன் பூவரசன் (12) ஆகிய மூவர் மர்ம கும்பலால் பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். மேலும், திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த 46 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
Samayam Tamil crime


இந்த சம்பவத்தில் மகள் வேலுமதி சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில் தாய் கனகம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் பூவரசன் மட்டும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இந்த நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கில் தடயங்கள் எதுவும் சிக்காத நிலையில் காரைக்குடி ASP ஸ்டாலின் IPS தலைமையிலான தனிப்படை பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, 55 நாட்களுக்கு பிறகு அதே ஊரைச் சேர்ந்த கண்ணையா மகன்கள் ரமேஷ் என்ற ரமேஷ் குமார், விஜி என்ற விஜயகுமார் மற்றும் முத்தையா மகன் சுரேஷ் என்ற வெள்ளைச்சாமி ஆகிய 3 பேர் உள்ளிட்ட 5 பேர் இச்சம்பவத்தில ஈடுபட்டது தெரிய வந்தது.

இதில் 3 பேரை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் தங்க மோதிரங்கள், வெள்ளி பொருட்கள் சிலவற்றை மட்டும் கைப்பற்றிய நிலையில் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு ராடையும் கைப்பற்றினர். மேலும் இந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவான நிலையில் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி