ஆப்நகரம்

உல்லாசத்துக்கு ரூம் ரெடி..! படுக்கையில் இடையூறு, பெண் குழந்தை அடித்துக்கொலை...

நாகப்பட்டினம் அருகே காதலியுடன் நெருக்கமாக இருக்க இடையூறாக இருந்ததாக மூன்று வயது பெண் குழந்தை அடித்துக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Sep 2020, 4:32 pm
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் எழிலரசி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் எழிலரசி இரு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், எழிலரசிக்கு ஹெலோ செயலி மூலம் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராமதாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


எழிலரசி கணவனை இழந்து வசித்து வருவதை சாதகப்படுத்திக்கொண்ட ராமதாஸ் தந்திர பேச்சு மூலம் எழிலரசியை கவர்ந்துள்ளார். அந்த வலையில் விருப்பத்தோடு வந்து விழுந்த எழிலரசி, உறவினர்களுக்கு தெரியாமல் காதலனுடன் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேரில் சந்திக்க விருப்பப்பட்ட இருவரும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னிக்கு வர முடிவு செய்துள்ளனர். அதனால் தனது 5 வயது மகனை மட்டும் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு 3 வயது மகளை மட்டும்தூக்கிக்கொண்டு வேளாங்கன்னிக்கு புறப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கு சந்தித்திக்கொண்ட இருவரும் உல்லாசமாக இருக்க முடிவு செய்தனர்.

அதற்காக அங்கேயே ஒரு அறையும் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், எழிலரசியின் மகள் அதற்கு இடையூறாக இருந்ததால், கோபத்தில் ராமதாஸ் சிறுமியை தொடர்ந்து அடித்துள்ளார். அதில் மயக்கமடைந்த சிறுமியை உடனே அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அம்மாவின் செஃல்பியால் கைநழுவி சென்ற குழந்தை..! கேரளாவில் துயரம்

ஆனால், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பயந்துபோன இருவரும் குழந்தையின் உடலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தப்பினர். இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து விசாரித்து வந்த அவர்கள், வேளாங்கன்னியில் சுற்றி திரிந்த ராமதாஸ் மற்றும் எழிலரசியை கைது செய்துள்ளனர்.

காதலனை சந்திக்க கள்ளத்தனமாக வெளியூருக்கு வந்ததோடு, காதலனின் ஆசைக்காக மகளின் மரணத்தையே மூடிமறைக்க முயற்சி செய்த பெண்ணின் செயலும், நம்மை நம்பி வந்த பெண்ணின் குழந்தை என்றும்கூட பாராமல் அடித்துக்கொலை செய்த நபரின் செயலும் போலீசாரையே கவலையடைய செய்துள்ளது.

அடுத்த செய்தி