ஆப்நகரம்

டிக்டாக் தோழியை நண்பர்களுடன் சேர்ந்து நாசம் செய்த இளைஞர்..! கேரளாவில் அதிர்வலை

கேரளாவில் டிக்டாக்கில் அறிமுகமான பெண்ணை வரவழைத்து கூட்டு பலாத்காரம் செய்த நான்கு பேர் கைது

Samayam Tamil 12 Sep 2021, 6:49 pm
கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி 32 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் டிக்டாக் மூலம் கோழிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அஜ்னாஷ் என்பவருடன் பழகியுள்ளார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக செல்போனில் பேசிக்கொண்டு வந்த இப்பெண்ணை அஜ்னாஷ் நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Samayam Tamil accused


அதன்படி வைஷ்ணவியும் அஜ்னாஷை சந்திக்க 300 கிலோமீட்டர் பயணம் செய்து கோழிகோடுக்கு வந்துள்ளார். அங்கு வைஷ்ணவியை சந்தித்த அஜ்னாஷ் இரவு 11 மணிக்கு நகரின் புறநகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து வைஷ்ணவியை உபசரித்த அஜ்னாஷ் உல்லாசமாக இருக்கலாம் என கூறி தவறான முறையில் நடந்துள்ளார்.

அதனால் அதிர்ச்சியடைந்த வைஷ்ணவி தப்பிக்க முயற்சித்த போது அவரை தாக்கிய அஜ்னாஷ் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த ஹோட்டலில் அடுத்தடுத்த அறைகளில் ஏற்கனவே தங்கியிருந்த அஜ்னாஷ் நண்பர்கள் மூன்று பேரை அஜ்னாஷ் அழைத்துள்ளார். அறைக்கு வந்தவர்கள், வைஷ்ணவிக்கு மதுவில் போதை பொருளை கலந்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து நான்கு பேரும் சேர்ந்து கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் பேச்சு, மூச்சின்றி கிடந்த வைஷ்ணவியை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நான்கு பேரும் தப்பியுள்ளனர். மருத்துவமனையில் மயக்கம் தெளிந்ததும் தனக்கு நேர்ந்ததை குறித்து இளம்பெண் மருத்துவர்களிடம் தெரிவித்ததையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார் அஜ்னாஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஃபஹத், நிஜாஸ், சுஹைப் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

நிர்வாணமாக பெண் போலீசாரிடம்; அதுவும் போலீஸ் ஸ்டேஷனிலேயே!

தொடர்ந்து அவர்களை தேடி வந்த போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் தீயாக பரவியதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரியும் கேரள மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி