ஆப்நகரம்

வெந்நீரில் தவறி விழுந்து 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

சுடு தண்ணீர் இருந்த வாலியில் தவறி விழுந்த 4 வயது பெண் குழந்தை உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 May 2019, 4:20 pm
சென்னை கும்மிடிபூண்டி அருகேவுள்ள காவேரி பேட்டை என்ற பகுதியில் 4 வயது பெண் குழந்தை தனது வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வெந்நீர் நிறைந்த வாலியை அங்கே வைத்துவிட்டு, குழந்தையில் தாய் சமையலறைக்கு சென்றுவிட்டார்.
Samayam Tamil வெந்நீர் வாலியில் விழுந்து 4 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
வெந்நீர் வாலியில் விழுந்து 4 வயது பெண் குழந்தை உயிரிழப்பு


திடீரென குழந்தையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், குழந்தையின் தாயும் ஓடி வந்தனர். அப்போது குழந்தை வெந்நீர் இருந்த வாலிக்குள் விழுந்துவிட்டது. இதை பார்த்து பதற்றமடைந்த அவர்கள் குழந்தையை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, உடற்கூறு ஆய்வுக்கு பிறகு குழந்தையின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி