ஆப்நகரம்

சென்னையில் 4 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற முன்னாள் ராணுவ வீரா்

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியல் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை கைது செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Samayam Tamil 28 Jun 2019, 9:09 am
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 60 வயது ஓய்வுபெற்ற ராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil Child Abuse 123.


சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் அந்தோணி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். தனியார் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு செந்தமிழ் செல்வி என்பவருடன் திருமணமாகி கார்முகிலன் என்ற 7 வயது மகனும், 4 வயது மகளும் உள்ளனர். நேற்று மாலை 2ஆம் வகுப்பு படிக்கும் கார்முகிலனை டியூஷனில் விடுவதற்கு செந்தமிழ் செல்வி சென்றுள்ளார்.

அப்போது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் மகனை டியூஷனில் விட்டுவிட்டு வீடுவந்த செந்தமிழ்ச் செல்வி தனது 4 வயது மகளை காணவில்லை என்று வீடு முழுவதும் தேடியுள்ளார். ஆனால் வீட்டில் சிறுமி கிடைக்கவில்லை. உடனடியாக அருகே உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது 4 வயது சிறுமி வீட்டின் கழிவறையில் இருந்த வாலியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்தில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி, அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகே வசித்து வரும் உறவினரான ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் மீது சந்தேகம் எழுந்தது.

அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மீனாட்சி சுந்தரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடா்ந்து மீனாட்சி சுந்தரத்தை காவல் துறையினா் கைது செய்துள்ளனர்.

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறிதும் இரக்கமின்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி