ஆப்நகரம்

கொலைக்காக அதிர்ச்சி பின்னணி? சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கிடந்த ஆண் சடலம்!

மாநகராட்சி அலுவலகத்தில் கிடந்த ஆண் சடலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 25 Jun 2019, 6:54 pm
தலைநகர் சென்னையில் பரபரப்புகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அதிர்ச்சி தரும் விஷயம் நடந்துள்ளது. அதாவது அந்த அலுவலகத்தின் மேற்கூரையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.
Samayam Tamil Dead Body


வழக்கம் போல் அலுவலகப் பணிக்கு வந்த ஊழியர்கள், சடலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், சடலத்தைக் கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டனர்.

அது 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்று தெரியவந்தது. அவர் மாநகராட்சி ஊழியராக இருக்குமோ என்று விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கும் அந்த அலுவலகத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

அந்த சடலத்தின் கழுத்தில் டெலிபோன் ஒயர்கள் சுற்றப்பட்டிருந்தன. இது போலீசாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. ஒருவேளை யாராவது கொலை செய்து, உடலை இங்கே போட்டு சென்று விட்டார்களோ.

அல்லது தற்கொலையாக இருக்குமோ என்று சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. எனவே அவர் சென்னையில் எங்காவது பணியாற்றி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி