ஆப்நகரம்

தமிழக சிறுமிகள் கூட்டு பலாத்காரம்..! கருவை கலைத்து வாத்து பண்ணையில் அட்டூழியம்

புதுச்சேரியில் 5 சிறுமிகளை கூட்டு வன்கொடுமை செய்த கும்பலில் 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 9 Nov 2020, 3:28 pm
புதுச்சேரி சாத்தமங்கலம் பகுதியில் கன்னியப்பன் என்பவருக்கு சொந்தமான வாத்து பண்ணை உள்ளது. இங்கு, வாத்துகளை மேய்ப்பதற்காக 2 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த சிறுமிகள் உட்பட 15 பேர் கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
Samayam Tamil சிறுமிகள் வன்கொடுமை


அவர்கள் தங்குவதற்கு கொட்டகை அமைக்கப்பட்டு அதில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக வேலை பார்த்து வந்த 5 சிறுமிகளை பண்ணையை நடத்தி வந்தவர் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், அதில் ஒரு சிறுமி கர்ப்பமடைந்து பின்னர் கரு கலைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், பண்ணையில் வேலை பார்த்து வந்த சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு வருவதாக மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அதில் தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தகாத உறவு, ஆபாச படங்கள் அழிப்பு, அலறியோடிய வாலிபர்..!

அவர்களை விசாரித்ததில், சிறுமிகளை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்ரவதை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் உட்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டு சிறுமிகளை வன்கொடுமை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொத்தடிமைகளாக வாத்து மேய்க்க அழைத்து வரப்பட்ட சிறுமிகளை 2 வருடங்களாக சித்தரவதை செய்து வந்த நபர்கள் தற்போது சிக்கியுள்ள நிலையில் எஞ்சியுள்ளவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி