ஆப்நகரம்

சென்னையில் அட்டூழியம்... அரிவாளால் கேக் வெட்டிய 6 வாலிபர்கள் கைது..!

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அரிவாளால் கேக் வெட்டி அதனை வீடியோவாக எடுத்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்த கல்லூரி மாணவர் உட்பட 6 பேரை திருவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 31 Jan 2020, 1:36 pm
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடும் கலாசாரம் தொடங்கியுள்ளது. பலமுறை போலீசார் எச்சரித்தும் கூட அதனை பொருட்படுத்தாமல் சண்டியர் தனத்தை வீடியோவாக எடுத்து வெளியிடுகின்றனர்.
Samayam Tamil அரிவாளால் கேக் வெட்டிய 6 வாலிபர்கள் கைது


சென்னை: திருவள்ளுவரைச் சேந்தவர் கவியரசு (20). இவர் கடந்த 20 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடினார். இதற்காக தனது நண்பர்களுக்கு ட்ரீட் கொடுப்பதற்காக ஏகாட்டூரை அடுத்த காமராஜபுரம் மைதானத்திற்கு அழைத்துள்ளார். அங்கு முகாமிட்ட அவர்கள், கவியரசின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட ஏற்பாடு செய்தனர்.

ஏற்கெனவே மது போதையில் இருந்த அவர்கள் சாலையில் இடையூறு செய்து பட்டா கத்தியை காட்டி மிரட்டி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியுள்ளனர். பின்னர் மைதானத்திற்குள் பட்டகத்தியால் கேக் வெட்டி அலப்பறை செய்து , அதனை வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிறக்கம் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி போலீசாரின் கவனத்திற்கு சென்றது.

சிறையில் ’டான்’கள்; ஹேப்பி மூடில் பிரபலங்கள் - டாட்டா காட்டிய போலீசார்!

இதையடுத்து திருவள்ளூர் போலீசார், வீடியோவில் பதியப்பட்டிருந்த இடங்கள், இருசக்கர வாகனங்களில் எண் ஆகியவற்றை வைத்து விசாரணை செய்த பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட கவியரசு, மணிகண்டன், சதிஷ் குமார், மனோஜ் குமார், விக்னேஷ், சக்திவேல் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதில் கவியரசு கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு திருவேற்காட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மணமகன் உட்பட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி