ஆப்நகரம்

பாட்டின்னு கூப்பிட்டதற்கு திட்டியதால் கொலை செய்தேன்: கைதானவர் அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை கொடுங்கையூர் பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவர் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 1 Oct 2019, 3:39 pm
சென்னையை சேர்ந்தவர் விமலா (68). இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமான அவர்கள் இருவரும் தங்களுடைய இல்லத் துணையுடன் வாழ்ந்து வருகின்றனர். சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்தில் சோதனை ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்ற தனது கணவர் கோவிந்தராஜ் மறைவுக்கு பின்னர், அவரது ஓய்வூதியத்தில் தனது வாழ்க்கையை கழித்து வரும் விமலா, கொடுங்கையூரை சேர்ந்த வெல்டர் தொழில் செய்து வரும் சுதாகர் (34) என்பவரது வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வருகிறார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதியன்று தனது வீட்டில் விமலா சடலமாக கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் விமலாவின் சடலத்தை கைபற்றி பிரேதப்பரிசோதணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து விடுவார். அப்படி விழுந்து இறந்திருக்கலாம் என அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கை இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் பதிவு செய்திருந்தனர்.

இதனிடையே, கழுத்து நெறிக்கப்பட்டு விமலா கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதணை முடிவில் தெரிய வர, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, தனது அழகிற்கு விமலா மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்ததாகவும், இரவு நேரங்களில் கூட நேர்த்தியாக உடையணிந்து இருப்பார் எனவும் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் விமலா வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் சுதாகரை கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், இம்மாத தொடக்கத்தில் விமலாவை தான் பாட்டி என கூப்பிட்டதாகவும், அதற்கு அவர் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டி அசிங்கப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர், சம்பவம் நடந்த இரவு மது போதையில் வந்ததுடன், விமாவின் குடியிருப்புக்கு சென்று அவரை தாக்கி கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி