ஆப்நகரம்

ஆந்திரா பயங்கரம்: மலையில் இருந்து விழுந்த மினி வேன்..! 7 பேர் உடல் நசுங்கி பலி

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இன்று காலை சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

Samayam Tamil 30 Oct 2020, 7:09 pm
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோகாவரம் மண்டலத்தில் உள்ள தந்திகொண்டாவில் உள்ள வெங்கடஸ்வர கோயிலில் கோக்கவரத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடந்தது. விழாவில் உறவினர்கள், நபர்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Samayam Tamil andhra accident


இந்நிலையில் திருமண விழாவில் கலந்துகொண்ட 17 பேர் வேன் மூலம் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றொரு நபர் மருத்துவமனையில் இறந்தார். பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காக்கினாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொய் பணத்தை ஆட்டைய போட்ட போலி உறவினர்..! ஆனா இப்படி ஏமாறக்கூடாது

தந்திகொண்டாவில் நடந்த விபத்து குறித்து ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான உடனடி மருத்துவ சிகிச்சையையும் வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து கிழக்கு கோதாவரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி