தமிழ்நாட்டில் சிறார் ஆபாச படங்களை பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ, பகிரவோ கூடாதென குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு கடுமையாக எச்சரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் விவரங்களை கொண்டு கைது நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் முன்னதாக திருச்சி ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் முதல் குற்றவாளியாக தமிழக காவல்துறை கைது செய்த சம்பவம் எட்டு திசையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகத்தில் சிறார் ஆபாச படங்களை பார்த்து பகிர்ந்து வந்த 30 நபர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் மீதான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படிப்புக்கு சென்ற மனைவி.. உயிரை விட்ட புதுமாப்பிள்ளை.. கடைசி செல்போன் அழைப்பு..!
இந்த நிலையில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மோகன் என்பவரது வீட்டில் டார்ஜிலிங்கை சேர்ந்த இரு மாணவிகள் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் தனிமையில் இருந்த அந்த மாணவிகளுக்கு மோகன் தனது செல்போனில் வைத்திருந்த சிறார் ஆபாசப்படங்களை காட்டியுள்ளார். தாத்தா வயதில் இருக்கும் ஒருவர் ஆபாசமாக துன்புறுத்தியதை கண்டு அதிர்ச்சியான இருவரும் சூலைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் கைதாகியுள்ள அவர் மீது போக்சோ சட்டம் போடப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று குற்ற சம்பவங்களை உடனுக்குடன் தெரிவிக்க தமிழக காவல்துறை காவலன் செயலியை அறிமுகப்படுத்தி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி பெண்களுக்கு இதுபோன்று தவறிழைத்தால் 7530001100 என்ற இலவச எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் முன்னதாக திருச்சி ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் முதல் குற்றவாளியாக தமிழக காவல்துறை கைது செய்த சம்பவம் எட்டு திசையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகத்தில் சிறார் ஆபாச படங்களை பார்த்து பகிர்ந்து வந்த 30 நபர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் மீதான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படிப்புக்கு சென்ற மனைவி.. உயிரை விட்ட புதுமாப்பிள்ளை.. கடைசி செல்போன் அழைப்பு..!
இந்த நிலையில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மோகன் என்பவரது வீட்டில் டார்ஜிலிங்கை சேர்ந்த இரு மாணவிகள் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் தனிமையில் இருந்த அந்த மாணவிகளுக்கு மோகன் தனது செல்போனில் வைத்திருந்த சிறார் ஆபாசப்படங்களை காட்டியுள்ளார். தாத்தா வயதில் இருக்கும் ஒருவர் ஆபாசமாக துன்புறுத்தியதை கண்டு அதிர்ச்சியான இருவரும் சூலைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் கைதாகியுள்ள அவர் மீது போக்சோ சட்டம் போடப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று குற்ற சம்பவங்களை உடனுக்குடன் தெரிவிக்க தமிழக காவல்துறை காவலன் செயலியை அறிமுகப்படுத்தி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி பெண்களுக்கு இதுபோன்று தவறிழைத்தால் 7530001100 என்ற இலவச எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.