ஆப்நகரம்

திமுக தொண்டரால் கொல்லப்பட்ட 75 வயது பாஜக தொண்டர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். 75 வயதான இவர் பாஜக வின் தோண்டர். பாஜக-அதிமுக கூட்டணியை ஆதரிக்கும் இவர், தன் கழுத்தில் மோடி, ஜெயலலிதா படத்தை மாட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Samayam Tamil 15 Apr 2019, 11:24 am
தேர்தல் நேரம் நெருங்கி வருகிறது. இதனால் பல கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் பல்வேறு கட்சித் தொண்டர்கள் தங்கள் தலைவர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பல கட்சிகளில் தொண்டர்களுக்கு இடையே அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதுண்டு.
Samayam Tamil Modi_fan.


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். 75 வயதான இவர் பாஜக வின் தோண்டர். பாஜக-அதிமுக கூட்டணியை ஆதரிக்கும் இவர், தன் கழுத்தில் மோடி, ஜெயலலிதா படத்தை மாட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கோபிநாத் என்ற நபர் தன்னை எம்ஜிஆரின் ரசிகர் என அடையாளப்படுத்திக் கொண்டு கோவிந்தராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் கைகலப்பாக மாற, கோவிந்தராஜன் கோபிநாத்தால் தாக்கப்பட்டார். இதனையடுத்து 9 மணி நேரம் கழித்து கோவிந்தராஜன் உயிரிழந்தார். கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இது இரு கட்சிகலுக்கு மத்தியில் மோதல் போக்கினை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பாஜக உறுப்பினர் ராமலிங்கம் கொலை சம்பவத்தால் திமுக, பாஜக மோதல் அதிகரித்து வருவதால் இந்த சம்பவம் மேலும் சர்ச்சையை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி