ஆப்நகரம்

குடித்துவிட்டு ரகளை செய்த 8 பேர் மீது அமிலம் வீசிய குடும்பத் தலைவர்

வீட்டின் மேல் மாடியில் மது அருந்திவிட்டு போதையில் ரகளை செய்த 8 பேர் மீது அமிலம் வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 20 May 2019, 7:01 pm
சென்னை நெற்குன்றத்தை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மனைவி ரஞ்சினி மற்றும் சகோதரன் பாஸ்கருடன் வசித்து வருபவர் கண்ணப்பன் (33). வெள்ளிவேலை செய்து வரும் இவருடைய சகோதர் பாஸ்கர் பெயின்டராக பணியில் உள்ளார்.
Samayam Tamil மது போதையில் ரகளை செய்த 8 பேர் மீது அமில வீச்சு- குடும்பத் தலைவர் கைது
மது போதையில் ரகளை செய்த 8 பேர் மீது அமில வீச்சு- குடும்பத் தலைவர் கைது


இவர்களுடையே வீட்டின் மேல்பாடியில் கோயம்பேட்டில் காய்கறி கடை வைத்துள்ள ஆரியலூரைச் சேர்ந்த எட்டு பேர் ஒன்றாக வசித்து வருகின்றனர். கடந்த ஞாயிறு இரவு, இந்த எட்டு பேரும் மது குடித்துவிட்டு மாடியில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிக கூச்சல் எழுந்ததால் மேலே சென்ற கண்ணப்பன் மற்றும் பாஸ்கர், ரகளையில் ஈடுபட வேண்டாம் என அந்த 8 பேரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் பதிலுக்கு அந்த நபர்கள், இவர்கள் இருவரிடமும் பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குடித்துவிட்டு சத்தம் எழுப்பியுள்ளனர்.

ஆனால் கண்ணப்பன் தொடர்ந்து அவர்களிடம் சத்தம் போடாமல் இருக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 8 பேரும் கண்ணப்பன், அவருடைய சகோதர் பாஸ்கர் மற்றும் வீட்டுக்குள் புகுந்து ரஞ்சினியையும் தாக்கியுள்ளனர்.

இதில் ரஞ்சினிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. கண்ணப்பனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. பொறுமையிழந்த கண்ணப்பன் தன்னுடைய வீட்டுக்குள் வைத்திருந்த அமிலத்தை எடுத்து வந்த 8 பேர் மீதும் ஊற்றிவிட்டார். இதில் அவர்கள் அலறி துடித்தனர்.

விவரம் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மோதல் தொடர்பான கேட்டறிந்தனர். அதில் அமலுக்கு வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் அழகு முத்து (38), கருப்புசாமி (32), வாஞ்சிநாதன் (18), வேல்முருகன் (23), வேல்முருகன் (25), வேல்முருகன் (23), வீராசாமி (23), அசோக் (19) என தெரியவந்தது.

அவர்களை உடனே கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் போலீசார். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 8 பேர் மீது அமிலம் வீசிய குற்றத்திற்கான கண்ணப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி