ஆப்நகரம்

கடல் அலை இழுத்து சென்ற 21 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு... புதுவையில் சோகம்

புதுச்சேரிக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த போது பழைய துறைமுகம் அருகே கடலில் குளித்த போது அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு.

Samayam Tamil 22 Nov 2021, 6:37 pm
சேலம் எடப்பாடி தாலுக்கா கெங்கனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கவுதம் (வயது21). அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் சஞ்சய் (20). கவுதம், சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேருடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் கடற்கரை அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
Samayam Tamil gowtham


இந்த நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில் கவுதம், சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் பழைய துறைமுகம் பாலத்தின் அருகே கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை கவுதம், சஞ்சய் ஆகியோரை கடலுக்குள் இழுத்துச்சென்றது.

உடனே அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். மேலும், அவர்கள் நண்பர்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த மீனவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் தீவிர தேடுதலுக்கு பின் கவுதம், சஞ்சய் ஆகியோரை மீட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் பேச்சு மூச்சின்றி கிடந்தனர்.

காதலன் மீது ஆசிட் அடிச்சு குருடாக்கிய பெண்... 'ஆண்டி லவ்'வால் வாலிபருக்கு நேர்ந்த துயரம்

உடனே அவர்கள் இருவரையும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கவுதம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் சஞ்சய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து கவுதம், சஞ்சய் ஆகியோரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்றிரவு புதுவை வந்தனர். இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அடுத்த செய்தி