ஆப்நகரம்

14 வயது சிறுமியுடன் உறவில் இருந்து வந்த 30 வயது நபர்: போக்சோவில் உள்ளே தள்ளிய போலீஸ்

சென்னையில் காதலிப்பதாக கூறி சிறுமியுடன் உறவில் இருந்து வந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 28 Sep 2021, 4:52 pm
அடையாறு காவல் எல்லைக்குட்பட்ட 14 வயது சிறுமியின் பெற்றோர், தங்களது மகளை பாபு என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் பலாத்காரம் செய்ததாக சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்


தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டதில், பாபு (எ) பிரேம்நாத் (30), மேற்படி 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி, பலமுறை சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன்பேரில் காவல் குழுவினர் வழக்கு பதிவு செய்து பாபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மொட்டை மாடியும், ஓப்பனாக இருந்த பாத்ரூமும்: 15 வீடியோக்களுடன் சிக்கிய ஆடம்ஸ்..!

தமிழகம் முழுக்கவே கொரோனா காலத்தில் பள்ளி மாணவிகள், சிறுமிகள் மீதான பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்துள்ளதால் போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அடுத்த செய்தி