ஆப்நகரம்

மதுரை இளைஞர் மர்ம மரணம்: 4 போலீசார் மீது வழக்குப் பதிவு! கஸ்டடி துன்புறுத்தலா?

மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் வழக்கில் 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Sep 2020, 7:46 pm
மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் தாலுகாவுக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கன்னியப்பன். இவரது மூத்த மகனான இதயக்கனி என்பவரும், அவரது உறவுக்காரப் பெண் இருவரும் காதலித்து, கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். இது குறித்து புனிதாவின் பெற்றோர் சாப்டூர் காவல் நிலையத்தில் தங்களது மகளைக் காணவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
Samayam Tamil madurai death case


சம்பவம் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, இருவரும் திருமணம் செய்துகொண்ட விஷயம் தெரிய வந்தது. இதுகுறித்து இதயக்கனியின் சகோதரர் கல்லூரி மாணவரான ரமேஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப்பின், முரணாக பதிலளித்துள்ளார்.

அதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் ரமேஷை சாப்டூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். நேற்று மாலை 6 மணிக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற ரமேஷ் இரவு வரை வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து, தகவல் தெரியாத பெற்றோர் பல இடங்களில் தேடினர். அணைக்கரைப்பட்டி கிராமத்தின் அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறு மலைப்பகுதி ரமேஷ் தூக்கு மாட்டியபடி இறந்த நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்த அப்பகுதி கிராம மக்கள், ரமேஷின் உறவினர்கள் மற்றும் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரமேஷின் சடலத்தைச் சுற்றி 500க்கும் மேற்பட்ட உறவினர்கள் சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்தினர். நிலைமை பதற்றமடைந்ததைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, விசாரணைக்கு அழைத்துச் சென்ற ரமேஷை காவல்துறையினர்தான் கொலை செய்திருக்கக் கூடும் என்று கிராம மக்கள் சந்தேகத்தின் பேரில் கூறினர். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே ரமேஷின் உடலை அப்புறப்படுத்த விடுவோம் எனப் பகிரங்கமாகத் தெரிவித்தனர்.

ஒரு நொடியில் மிஸ்ஸான திருடன், சிசிடிவியில் பகீர், கோவை மக்களே உஷாராக இருங்க...

சுமார் 6 மணி நேரமாகத் தொடர் போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பேரையூர் டிஎஸ்பி மதியழகன் சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் மற்றும் காவலர் புதியராஜா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் பெற்றோர், உறவினர் உட்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி