ஆப்நகரம்

பாமக நிர்வாகி அடித்துக்கொலை? கடலூர் திமுக எம்பி மீது வழக்கு..! முந்திரி ஆலை மர்மம்

கடலூர் அருகே பாமக நிர்வாகி மரணம் தொடர்பாக திமுக எம்பி டி.ஆர்.வி ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Samayam Tamil 20 Sep 2021, 9:10 pm
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவர் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் உள்ள டி.ஆர்.வி. காயத்ரி முந்திரி ஆலையில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த ஆலை திமுகவைச் சேர்ந்த கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமானது.
Samayam Tamil கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ்


தினமும் காலை 8 மணிக்கு பணிக்குச் சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்பும் கோவிந்தராசு நேற்றிரவு வீடு திரும்பவில்லை. அவரை அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணிக்கு, சென்னையில் பணியாற்றும் அவரது மகன் செந்தில் வேலை, கோவிந்தராஜின் செல்போனில் இருந்து தொடர்பு கொண்ட எம்பி ரமேஷின் உதவியாளர், ''உனது தந்தை மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது'' என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து கோவிந்தராஜின் குடும்பத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, அவரது உடல் முழுவதும் காயங்களும், இரத்தக் கரைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவிந்தராஜூவை அடித்துக்கொள்ளப்பட்டார் என்றும் இதில் ரமேஷின் சதி இருப்பதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

குன்றத்தூர் அபிராமியின் குடும்பத்தில் அதிர்ச்சி: தீவிர விசாரணையில் போலீசார்..!

இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாகியுள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கோவிந்தராஜின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதை வெளிப்படைத்தன்மையுடன் விராசனை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் '' கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடலூர் எம்.பி உள்ளிட்ட 5 பேர் மற்றும் பிறர் மீது சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது!

கோவிந்தராசு கொலையில் உள்ள ஐயம் போக்கப்பட வேண்டும் என்பதாலும், இதில் சம்பந்தப்பட்டவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் கோவிந்தராசுவின் உடற்கூறாய்வு தமிழகத்துக்கு வெளியே புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டும்!'' என இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த செய்தி