ஆப்நகரம்

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்.. பரிதவிக்கும் தாய்... ஈரோடு சம்பவம்

ஈரோடு அருகே கல்லூரி செல்வதாக கூறி சென்ற கல்லூரி மாணவி வீடு மாயமானர்.

Samayam Tamil 9 Jan 2023, 7:14 pm
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ராதாமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராதாமணி கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவரது பெரிய மகள் சத்தியாவுக்கு திருமணமாகி விட்டது.
Samayam Tamil college girl missing


இளைய மகள் தீபா (19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ராதா மணி ஆதிரெட்டியூரில் உள்ள அவரது அண்ணனுக்கு உடல்நிலை சரியி ல்லாததால் அவருடன் இருந்து அவரை பராமரித்து வருகிறார். வீட்டில் ராதாமணியின் இளைய மகள் தீபா மட்டும் தனியாக இருந்து வந்தார். இந்த நிலையில் தீபா கல்லூரிக்கு செல்வதாக அவரது உறவினரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் தீபா வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ராதாமணிக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து அக்கம் பக்கம் மற்றும் உறவின ர்களிடம் விசாரித்தும், தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் அவர் கல்லூரிக்கு சென்று விசாரித்தார். ஆனால் கல்லூரி விடுமுறை என தெரிய வந்தது.

இது குறித்து ராதாமணி வெள்ளி திருப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தீபா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி