திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முகமூடி அணிந்துகொண்டு வங்கியில் நுழைந்த இளைஞர் பொம்மை துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளை காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்றார். அப்போது, இருக்கையில் அமர்ந்திருந்த நபர் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து கொள்ளையடிக்க வந்தவரின் கழுத்தில் போட்டு மடக்கி பிடித்துள்ளார்.
அதன் பிறகு மற்றவர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கொள்ளை அடிக்க வந்தது கல்லூரி மாணவன் என தெரிய வரவே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த மாணவனை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். மேலும், கொள்ளை அடிக்க முயற்சித்தபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒரு இளைஞர் மிளகாய் பொடி பேப்பர் ஸ்பிரே, ரசப்பொடி, கட்டிங் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்து கொலை சம்பவத்தில் ஈடுபட முயன்றார்.
காரில் கடத்தி கூட்டு வன்கொடுமை; இளம்பெண் பொய் புகார்..! காஞ்சிபுரத்தில் பரபர..
அப்போது, வங்கி ஊழியர் ஒருவர் வெளியே வந்து பொதுமக்களை கூச்சலிட்டு அழைத்ததால் பொதுமக்கள் மற்றும் வங்கி காவலாளி உதவியுடன் காவல்துறையினரிடம் கொள்ளையனை பிடித்து ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் பெயர் கலீல் ரகுமான் (25). இவர், அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்த்துவிட்டு வங்கியில் கொள்ளை அடிக்க முயன்றதாக வாக்குமூலம் கொடுத்து அதிர்ச்சியை கிளப்பினார். இந்த சம்பவத்தின் பரபரப்பு சற்று ஓய்ந்துள்ள நிலையில் தற்போது அதே பாணியில் மாணவர் ஒருவர் வங்கியில் நுழைந்து கொள்ளை அடிக்க முயன்று போலீசில் சிக்கிய சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பிறகு மற்றவர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கொள்ளை அடிக்க வந்தது கல்லூரி மாணவன் என தெரிய வரவே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த மாணவனை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். மேலும், கொள்ளை அடிக்க முயற்சித்தபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒரு இளைஞர் மிளகாய் பொடி பேப்பர் ஸ்பிரே, ரசப்பொடி, கட்டிங் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்து கொலை சம்பவத்தில் ஈடுபட முயன்றார்.
காரில் கடத்தி கூட்டு வன்கொடுமை; இளம்பெண் பொய் புகார்..! காஞ்சிபுரத்தில் பரபர..
அப்போது, வங்கி ஊழியர் ஒருவர் வெளியே வந்து பொதுமக்களை கூச்சலிட்டு அழைத்ததால் பொதுமக்கள் மற்றும் வங்கி காவலாளி உதவியுடன் காவல்துறையினரிடம் கொள்ளையனை பிடித்து ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் பெயர் கலீல் ரகுமான் (25). இவர், அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்த்துவிட்டு வங்கியில் கொள்ளை அடிக்க முயன்றதாக வாக்குமூலம் கொடுத்து அதிர்ச்சியை கிளப்பினார். இந்த சம்பவத்தின் பரபரப்பு சற்று ஓய்ந்துள்ள நிலையில் தற்போது அதே பாணியில் மாணவர் ஒருவர் வங்கியில் நுழைந்து கொள்ளை அடிக்க முயன்று போலீசில் சிக்கிய சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.