ஆப்நகரம்

அருப்புக்கோட்டை அருகே மாணவி உடல் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கிராமத்தில் கலாராணி என்ற தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். கொலையா தற்கொலையா என அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Samayam Tamil 15 Apr 2019, 2:59 pm
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கிராமத்தில் கலாராணி என்ற தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். கொலையா தற்கொலையா என அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
Samayam Tamil 8255a3c5-cd5f-4388-bc3c-495e0f81cac0


விருதுநகர் மாவட்டம் அருகே அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அக்கம்மாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் நல்லாலு. இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்

மகள் கலாராணி அருப்புக்கோட்டையில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டபடிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து கலாராணியை காணததால் சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

இன்று கலாராணியின் தம்பி சந்தேகமடைந்து வீட்டின் அருகே உள்ள மூடப்படாத கிணற்றில் பார்க்கும்போது கலாராணி சடலமாக மிதந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த கலாராணியின் தம்பி வீட்டிற்கு வந்து தகவல் தெரிவித்துள்ளார்

அதிர்ச்சி அடைந்த கலாராணியின் பெற்றோர் கிணற்றில் மிதந்த கலாராணியின் உடலை பார்த்து கதறி அழுதனர்

சம்பவம் குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கலாராணியின் உடலை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் சம்பவத்தை பார்வையிட்டார். பின்னர் கலாராணியின் உடலை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கலாராணி நேற்று தன் ஆண் நண்பருடன் வெகு நேரமாக பேசியுள்ளார் இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து காலாராணியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர் இதனால் கலாராணியை அவர் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த கலாராணி தன் வீட்டின் அருகே உள்ள மூடப்படாத கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது.

மேலும் கலாராணி தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்ற அறிய அருப்புக்கோட்டை நகர காவல்துனையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கல்லூரி முதலாம் படிக்கும் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி