ஆப்நகரம்

கைலாசாவில் உணவகம்: மதுரை ஹோட்டல் உரிமையாளர் மீது பரபரப்பு புகார்..!

கைலாசாவில் உணவகம் அமைக்க நித்யானந்தாவிடம் அனுமதி கேட்டிருந்த மதுரை ஹோட்டல் உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Aug 2020, 4:12 pm
இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தாவின் நடவடிக்கைகள் மீண்டும் பரபரப்பாக பேச தொடங்கியுள்ளன. இந்தியாவில் இருந்து தப்பியுள்ள அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாகியுள்ளதாகவும், நாட்டிற்கான மத்திய வங்கியை தொடக்கி நாணயங்களை வெளியிடப்போவதாகவும் முன்னதாக அறிவித்தார்.
Samayam Tamil madurai hotel owner


அதன்படி. கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று 20 க்கும் மேற்பட்ட டாலர்கள் புகைப்படங்களை வெளியிட்டார். இருப்பினும், கைலாசா எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கைலாசாவில் ஹோட்டலை அமைக்க அனுமதி வழங்குமாறு மதுரையை சேர்ந்த டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளரும், மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குமார், நித்யானந்தாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியிடம் ஹோட்டல் நடத்த அனுமதி தரக்கோரி குமார் உதவி கேட்டுள்ள செய்தி தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் வெளியாகி சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வார்டில் கை விலங்குடன் பியர், சைடிஷ்..! வழிப்பறி குற்றவாளிக்கு அமோக விருந்து

இந்த நிலையில், அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளிக்கு ஆதரவு தருவதாகவும், நித்யானந்தாவை நல்லவர் போல காட்டும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் கூறி குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அடுத்த செய்தி