ஆப்நகரம்

கரூரில் 15 வயசு சிறுமிக்கு குழந்தை கொடுத்துவிட்டு, சிசுவை புதைத்த குடும்பம்..!

கரூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கி இறந்த குழந்தையை புதைத்துவிட்டு நாடகமாடிய குடும்பத்தை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 23 Nov 2020, 8:39 pm
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த வேங்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் குளித்தலையில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil ரஞ்சித் குடும்பம்


இதனால், சிறுமியின் வீட்டில் ஆள் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். அந்த பலனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அதனை வீட்டில் தெரியப்படுத்தமால் இருந்து வந்த சிறுமி 8 மாதம் கடந்த பிறகு கர்ப்பமான விஷயம் வீட்டாருக்கு தெரிய வந்தது.

உடனே சிறுமியை முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தநிலையில் அது இறந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பிரசவம் பார்க்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் இருந்ததால் சம்பவத்தை குறித்து சைல்டு உதவி மையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

குளிக்கும்போதும், ஆடை மாற்றும்போதும் பார்ப்பாங்க, முதலிரவில் மோசம்: ஜெயமாலா வாக்குமூலம்

அதனையடுத்து விவகாரம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் செல்லவே மருத்துவமனைக்கு வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை செய்ய முற்பட்டனர். அப்போது சிறுமிக்கு உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிறந்த பெண் குழந்தையை ரஞ்சித்தின் தம்பி மகேஷ், மாமா முத்துசாமி, அப்பா நல்லதம்பி, அம்மா சந்திரா ஆகியோர் கடம்பர் கோவில் அருகே புதைந்துள்ளது தெரிய வந்தது. பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்கு பதிவு செய்து மேற்கண்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த ரஞ்சித்தையும் கைது செய்து குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி