ஆப்நகரம்

சேட்டை செய்த மகனை சார்ஜர் ஒயரால் கழுத்தை இறுக்கிய தந்தை..!

திருவள்ளூர் அருகே சேட்டை செய்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Dec 2020, 4:45 pm
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி நீலா. இந்த தம்பதிக்கு கார்த்திக் என்ற பள்ளி செல்லும் வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீலா வெளியில் சென்று விட்ட நேரத்தில் மகனும், கணவனும் மட்டும் வீட்டில் இருந்தனர். பின்னர் நீலா வீட்டுக்கு வந்தபோது மகன் கார்த்திக் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான்.
Samayam Tamil மகனை கொலை செய்த தந்தை


அதை கண்டு அதிர்ந்து போன நீலா மகனை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். நன்றாக விளையாடி கொண்டிருந்த மகனின் திடீர் மரணம் நீலாவுக்கும், உறவினர்களுக்கும் சந்தேகம் ஏற்படவே அதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, கார்த்திக்கின் அப்பா முத்து முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருடன் நடத்திய கிடுக்குபிடி விசாரனையில் அவர் அளித்த வாக்கு மூலம் பகீரை தந்தது. அதாவது உயிரிழந்த சிறுவன் முத்து - நீலா தம்பதிக்கு ஒரே மகன் என்று கூறப்படுகிறது.

தாம்பத்யமே நடக்கல, வேதனையில் மனைவி, கணவனின் பதில்..!

இந்த நிலையில் கார்த்திக் அடிக்கடி வீட்டில் குறும்பு தனம் செய்து வந்தது முத்துவுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்றும் கார்த்திக் சேட்டை செய்ததால் ஆத்திரமடைந்த முத்து கார்த்திக்கை அடித்ததுடன் செல்போன் சார்ஜர் ஒயராலால் மகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக போலீசாரிடம் கூறினார்.

அதனைடுத்து அவர் மீது கொலை வழக்கை பதிவு செய்துள்ள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேட்டை செய்த மகனை தந்தையே இரக்கமின்றி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி