ஆப்நகரம்

அண்ணன் கண் முன்னே ஐடி பெண் ஊழியர் பலி; சென்னை அருகே சோகம்

சென்னையில் ஐடி நிறுவன பெண் ஊழியர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியானார்.

Samayam Tamil 11 Feb 2023, 7:34 pm
சென்னை, ஆயிரம் விளக்கு, அஜிஸ் முல்க் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா (22). இவர், கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு பிரியங்கா வேலை முடிந்து, அண்ணன் ரிஷி நாதன் (23) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
Samayam Tamil priyanka


ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலை அருகே வந்தபோது, மாநகர பேருந்தை முந்தி செல்ல ரிஷி நாதன் முயற்சித்தார். அப்போது, நிலத்தடுமாறி கீழே விழுந்த பிரியங்காவின் தலையில் மாநகர பேருந்தின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பிரியங்கா பரிதாபமாக பலியானார்.

ரிஷி நாதன் சிறு காயத்துடன் தப்பினார். அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி