ஆப்நகரம்

கதறி கதறி அழும் பெண் காவலர்... உடலில் பெட்ரோல்... என்ன நடந்தது?

விழுப்புரத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 29 Apr 2022, 4:39 pm
ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலரின் புகார் மீதே போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் கதறி அழுதவாறு தற்கொலை முயற்சி
Samayam Tamil விழுப்புரம் கலெக்டர் அலுவக செய்தி


விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பாலகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் கௌசல்யா. இவர், ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். கணவரை இழந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், வரதட்சனைக் கேட்டு தனது அக்கா பிரேமாவின் கணவர் தோமாயி, அவ்வப்போது வீடு புகுந்து, தகாத வார்த்தைகளால் திட்டி அடிப்பதாக, கௌசல்யா விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்து பல மாதங்களாகியும், போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர் கௌசல்யா, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

சித்ராவை விரும்பிய அமைச்சரின் மகன்... ஹேம்நாத் சொல்வது இவரைதானா..?

உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர், இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி