ஆப்நகரம்

கோவையில் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் நண்பர் கதறல்.. வீடியோவில் கெஞ்சல்..!

கோவையில் நீதிமன்றம் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞரின் நண்பர் வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Mar 2023, 2:19 pm
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே கடந்த 13 ஆம் தேதி வாலிபர் கோகுல் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவை மாநகரை உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரையும் கோத்தகிரியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil kovai murder


அவர்களை போலீசார் கோவைக்கு அழைத்து வரும் வழியில் மேட்டுப்பாளையம் அருகே ஜோஸ்வா, கவுதம் ஆகிய இருவர் தப்பியியோட முயற்சித்தனர். அவர்களை போலீசார் இடுப்பு கீழே சுட்டு பிடித்தனர். இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட கோகுல் என்பவரது நண்பர் கவுதம் போலீஸ் என்கவுண்டருக்கு பயந்து வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காமராஜர் புரத்தை சேர்ந்தவர் கவுதம். இவர் மீது ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு உட்பட பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், ரவுடி கவுதமின் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கோர்ட் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

தற்போது ரவுடி கவுதம் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் ரத்தினபுரி போலீசார் கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக கவுதமின் மனைவி மோனிஷா (வயது 21), அவரது சகோதரி தேவிஸ்ரீ (வயது 28), மோனிஷாவின் மாமியார் (வயது 48) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ரவுடி கவுதம் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நான் கடந்த 8 ஆண்டுகளாக அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டிருந்தேன். 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அப்போது முதல் ஒழுக்கமாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு 7 வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளதால் என்னை சுட்டு பிடிப்பேன் என்று பயமுறுத்துகின்றனர். என்னை என்கவுண்டர் செய்துவிடுவதாகவும் தெரியவந்துள்ளது. இதனை போலீசாரே என்னிடம் தெரிவித்தனர்.

'நான் வரவா சார்'.. வீக்னஸ் அதிகாரிக்கு கொக்கி.. காஞ்சியில் பெண் தாதாவின் சீக்ரெட்

எனது மனைவியை மாமியார் வீட்டில் வைத்து பார்த்து வந்தேன். எனக்கு அப்பா, அம்மா இல்லை. இதனால் மனைவி மீது கஞ்சா வழக்கு பதிந்துள்ளனர். போலீசார் என்னை நீதிமன்றத்தில் சரண்டராக கூறுகின்றனர்.

நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த 4 வருடமாக எந்த பிரச்சனையிலும் நான் ஈடுபடுவதில்லை. திருந்தி வாழ்கிறேன். என்னை சிக்கவைக்க பார்க்கிறார்கள். எனக்கு தீர்வு வேண்டும் என்று இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

அடுத்த செய்தி