ஆப்நகரம்

சோற்றில் விஷம் கலந்த பெற்றோர்... உஷார் படுத்திய பாட்டி... காதலனை கரம் பிடித்த மாணவி

ஈரோடு காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டு பிசியோதெரபி படித்த மாணவி காதலனுடன் தஞ்சம்

Samayam Tamil 14 Jun 2022, 3:45 pm
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுண்டம்பாளையம் ஜே ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவரது மகள் ஸ்ரீரம்யா. அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகிறார்.
Samayam Tamil காதல் ஜோடி


இந்நிலையில், காசிபாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவர் வாணிபுதூரில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டாக காதலித்து வந்தனர். சரவணனை காதலிப்பது வீட்டுக்கு தெரிந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும், சரவணனை விட்டு விலகுமாறு ஸ்ரீ ரம்யாவின் பெற்றோர்கள் கடுமையாக திட்டி ஸ்ரீ ரம்யாவை அடித்து உதைத்துள்ளனர். மேலும், சாப்பாட்டில் விஷம் வைத்தும் ஸ்ரீ ரம்யாவை சாப்பிட கொடுத்தபோது அதனை வீட்டில் இருந்த பாட்டி விஷம் அருந்திய சாப்பாட்டை சாப்பிடாதே என்று தடுத்து நிறுத்தியுள்ளார். இது ஸ்ரீ ரம்யாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேல் வீட்டில் இருந்தால் கொன்று விடுவார்கள் எனக்கருதி வீட்டை விட்டு ஸ்ரீரம்யா வெளியேறி நேற்று முன்தினம் அருகில் உள்ள ஒரு கோவிலில் ஸ்ரீ ரம்யாவும் சரவணனும் திருமணம் செய்து கொண்டனர்.

மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களுக்கு குறி... நெல்லை செக்ஸ் சைக்கோவின் அதிர்ச்சி தகவல்

இதனை தெரிந்த ஸ்ரீ ரம்யாவின் பெற்றோர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளதால் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லை எனக் கருதினர். இதனையடுத்து இன்று மாவட்ட போலீஸ் எஸ்பி சசி மோகனிடம் பாதுகாப்பு கேட்டு ஸ்ரீரம்யா மற்றும் கணவருடன் நேரில் வந்து மனு வழங்கினார். மனுவை விசாரித்த காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் விசாரணை நடத்தி வருகிறார்.

அடுத்த செய்தி