ஆப்நகரம்

உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணுக்கு தீ வைத்த மேஸ்திரி..! எறிந்த நிலையில் சவுமியா செய்த செயல்...

தருமபுரி அருகே ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை தீ வைத்து எரித்து கொலை செய்த நபரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Samayam Tamil 8 Mar 2020, 7:10 pm
தருமபுரி மாவட்டம் அத்தியமான்கோட்டையைச் சேர்ந்த பழனி கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சவுமியா, நீலா, ரத்தினம் ஆகிய மூன்று மனைவிகள். இந்த நிலையில் பழனி கட்டிட பணிக்காக தனது இரண்டாவது மனைவி ரத்தினத்துடன் பெங்களூருக்கு சென்று விட்டார். இதையடுத்து சவுமியா தனது குழந்தையுடன் காரிமங்கலத்தில் வசித்து வந்தார்.
Samayam Tamil உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணுக்கு தீ வைத்த மேஸ்திரி


அப்போது அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற வேலுச்சாமி என்ற மேஸ்திரியுடன் சவுமியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காதலாக மாறியதால் இருவரும் தனிமையில் இருந்தும் வந்துள்ளனர். சில நாட்களில் சவுமியாவுக்கு அடுத்தடுத்து மூன்று பேருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலுச்சாமி கணவனைப்போல சவுமியாவை கண்டித்துவந்துள்ளார்.

பேசின் பாலத்திலிருந்து தண்டவாளத்தில் விழுந்த பைக்..! சோகத்தில் முடிந்த சாகசம்...

வேலுச்சாமியின் சொல் பேச்சை கேக்காத சவுமியா தனது விருப்பம் போலவே மற்ற நபர்களுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி வேலுச்சாமி சவுமியாவின் வீட்டுக்கு சென்று தனிமைக்கு அழைத்துள்ளார். ஆனால் சவுமியா அதற்கு மறுத்துவிட்டதோடு, வற்புறுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் எனக்கூறி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றினார்.


இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியதால் சவுமியாவின் மீது வேலுச்சாமி தீ குச்சியை பற்றவைத்து போட்டுள்ளார். இதனால் உடலில் தீ பற்றி அலறிய அவர் வேலுச்சாமியை கட்டிபிடித்ததால் இருவரும் தீ பற்றிய நிலையில் கதறி துடித்தனர். அவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சவுமியா சிகிச்சை பலன்றி உயிரிழந்த நிலையில் வேலுச்சாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி