ஆப்நகரம்

3 வயது பெண் குழந்தையை வீட்டில் அடைத்து 7 வது மாடியில் இருந்து வீசிய கொடூரன்.!

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது நண்பனின் மூன்று வயது மகளை ஜன்னல் வழியாக வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Sep 2019, 6:00 pm
மும்பை மாநகரம் கொலாபாவில் உள்ள சங்கம் பவன் என்ற குடியிருப்பில் வசித்து வருபவர் ஹதிராமணி. இவருக்கு சனன்யா, ஸ்ரேயா, மற்றும் ஒரு மகனும் உள்ளனர். ஹதிராமணிக்கு அனில் சுக்கானி என்ற நண்பர் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அசோகா என்ற மற்றொரு குடியிருப்பில் ஏழாவது மாடியில் வசித்து வருபவர்.
Samayam Tamil 06


ஹதிராமணியின் பள்ளிக்கால நண்பரான இவர் அடிக்கடி சனன்யா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அனில் சுக்கானி கடந்த சனிக்கிழமை அன்று ஹதிராமணி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரேயா, சனன்யா மற்றும் சகோதரன் ஆகியோரை இவர் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட போலீஸ் எஸ்.ஐ- மதுரையில் பரபரப்பு சம்பவம்!

இதனையடுத்து மூவரும் தனது பாட்டியுடன் அனில் சுக்கானி வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்குள் நுழைந்ததும் சற்றும் எதிர்பாராதவாறு அந்த கொடூரன் சனன்யாவை அழைத்துக்கொண்டு தனி அறைக்குச் சென்று கதவை சாத்தியுள்ளார். சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த சனன்யாவின் பாட்டி கதவை திறக்கும்படி கூச்சலிட்டுள்ளார்.

ஆனாலும் அந்த கொடூரன் அனில் கதவை திறக்கவில்லை. உடனே சனன்யாவின் பாட்டி மற்ற இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். வீட்டை விட்டு வெளியே வந்த மூதாட்டி குடியிருப்பில் வசிப்பவர்களிடம் இது குறித்து கூறியிருக்கிறார்.

போலீஸ் வேடமணிந்த கொலையாளிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவன்...சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு

இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அனில் சுக்கானி சனன்யாவை ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளான். 7 வது மாடியில் இருந்து விழுந்த சனன்யாவை கீழே இருந்தவர்கள் கார் பார்க்கிங் அருகே கண்டுபிடித்துள்ளனர். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பியும் உள்ளனர்.

ஆனால் சிறுமியின் உயிர் விழுந்த நேரத்திலே சென்றுள்ளது. இதனையடுத்து குற்றவாளி அனில் சுக்கானியை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். சனன்யாவின் தாயார் கர்பமாக உள்ளதால் அவர் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் தந்தை ஹதிராமணி வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போலீசார் அனில் சுக்கானியின் மீது கொலை வழக்கை பத்தி செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தியுள்ளனர். எனினும் இவன் எதற்காக சிறுமியை கொலை செய்தான் என்பதை குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி