ஆப்நகரம்

மகனுக்கு சிப்ஸ் பாக்கெட்.... தந்தைக்கு எலக்ட்ரிக் ஷாக்... போலீஸ் லாக்கப்பில் நேர்ந்த சோகம்

விசாரணை என்ற பெயரில் மகனின் கண்முன்னே, அவரது தந்தையை போலீஸார் பல மணிநேரம் அடித்து துன்புறுத்தியதும், அதன் விளைவாக அவர் இறந்த சம்பவமும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Oct 2019, 6:36 pm
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் தோமர் (35) என்ற வாலிபர், காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
Samayam Tamil pl


இவரது உறவினரான பிரீத்தி என்ற பெண், கடந்த ஆகஸ்ட் மாதம் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். எரிந்த நிலையில் புதைக்கப்பட்ட அவரது உடலை கடந்த ஆகஸ்ட் 30- ஆம் தேதி, தோண்டி எடுத்த போலீஸார், இக்கொலையில் பிரதீப், அவரது உறவினரான அருண் ஆகியோருக்கு சம்பந்தம் இருப்பதாக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணைக்காக, பிரதீப் தோமர், சிஜார்சி காவல் நிலையத்துக்கு வலுகட்டாயமாக அழைக்கப்பட்டார். இதையடுத்து, தோமர் தனது மகனுடன் சிஜார்சி காவல் நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

அங்கு விசாரணை என்ற பெயரில், தோமரை லத்தியால் அடித்தும், எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தும், ஸ்க்ரு டிரைவரால் கைகளை திருகியும் என பலவாறு போலீஸார் டார்ச்சர் செய்துள்ளனர்.

தன் தந்தைக்கு நேரும் கொடுமைகளை போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்து செய்வதறியாது பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் தோமரின் 10 வயது மகன். அவருக்கு சிப்ஸ் பாக்கெட் கொடுத்து சாப்பிட சொன்ன போலீஸார், சப்தம் போடக்கூடாது என அந்த சிறுவனை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.

முத்தமிட்டபோது ஏற்பட்ட சிக்கல்.. மனைவியின் நாக்கை கத்தியால் வெட்டிய கணவர்...

இதனிடையே, தோமரின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் ஹாபூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மீரட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பிரதீப் தோமர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தோமரின் மரணத்துக்கு போலீஸார் தான் காரணம் என்றும், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, புலிக்குவா காவல் நிலைய தலைமை காவலர் உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தோமரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீரட் மாவட்ட காவல் துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் தன் கண் முன்னே போலீஸார் தமது தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவத்தை தோமரின் மகன் கண்ணீர் மல்க விவரித்தது, அதனை கேட்பவர்களின் நெஞ்சை பிசைவதாக அமைந்தது.

‘ரூ. 10 லட்சம் இருக்கா, மத்திய அரசு வேலை’

"குறைந்தபட்சம் 10 போலீஸார் தனது தந்தையை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினர். அவருக்கு எல்க்ட்ரிக் ஷாக் கொடுப்பது, ஸ்க்ரு டிரைவரால் கைகளை திருகியும் என பல்வேறு விதமாக துன்புறுத்தினர். மதுபோதையில் இருந்த போலீஸார், என் தந்தை வலியால் துடித்தபோதும் அவருக்கு குடிக்க தண்ணீர் கூட தரவில்லை.

எனக்கு சிப்ஸ் பாக்கெட் கொடுத்து சாப்பிடும்படி சொன்ன போலீஸார், சப்தம் போடக்கூடாது என துப்பாக்கி முனையில் மிரட்டினர்" என தோமரின் மகன் கண்ணீர் மல்க கூறியது காண்போரை கண் கலங்க செய்தது.

அடுத்த செய்தி