ஆப்நகரம்

பெற்ற மகனை நடுரோட்டில் தவிக்கவிட்டு, காதலனுடன் சென்ற தாய்...

ராமநாதபுரத்தில் திருமண உறவை மீறிய பழக்கத்தை வைத்திருந்த பெண் ஒருவர் தனது 3 வயது மகனை நடுரோட்டில் தவிக்க விட்டு காதலனுடன் சென்று விட்ட சம்பவம் அதிர்ச்சிடைய செய்துள்ளது.

Samayam Tamil 5 Dec 2019, 5:06 pm
மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலையத்தில் மூன்று வயது சிறுவன், பெற்றோரை தேடி அழுது கொண்டிருப்பதாக, சில நாட்களாக வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவியது. இதனையடுத்து சிறுவன் நடராஜ் பரமக்குடியை சேர்ந்த தந்தை பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டான்.
Samayam Tamil பெற்ற மகனை நடுரோட்டில் தவிக்கவிட்டு, காதலுடன் சென்ற தாய்...


அதே சமயத்தில் பாலாஜி தனது மனைவி சுகன்யாவை காணவில்லை என பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலிஸாரின் விசாரணையில் பின்வரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண் முன்னே அம்மாவை கொன்றார்... 6 வயது மகன் வாக்குமூலம்... இளம்பெண் மரணத்தில் திருப்பம்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மந்திரி மேனன் தெருவை சேர்ந்த பாலாஜிக்கும், சுகன்யாவுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று வயதில் நடராஜ் என்ற மகன் உள்ளான். சுகன்யா சில வருடங்களாக ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவருடன் அடிக்கடி போனில் பேசிவந்துள்ளார். இதனை கணவர் பாலாஜி கண்டித்துள்ளார்.

இதனால் சிறிது நாட்களாக அந்த நபருடன் தொடர்பை துண்டித்து வந்த அதன் பிறகு மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சுகன்யா, மகன் நடராஜை அழைத்து கொண்டு மதுரை செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அங்கு மகனுடன் வந்திருந்த சுகன்யாவை அவரது காதலன் டூவிலரில் அழைத்துக்கொண்டு மதுரைக்கு சென்றுள்ளார்.

வாட்ஸ் ஆப்புகளில் ஆபாச வீடியோ: சென்னையில் ஒருவரிடம் விசாரணை!!

இந்நிலையில் அவர்கள் சிலைமான் காவல் நிலையம் அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றதும் சிறுவனை தனிமையில் விட்டுவிட்டு புறப்பட்டுள்ளனர். அம்மா... அம்மா... என்னை விட்டு போகாதே !. என கதறி அழுத சிறுவனை சற்றும் கண்டுக்காமல் கள்நெஞ்சம் கொண்ட சுகன்யா காதலனுடன் தப்பித்து சென்றுள்ளார்.

மேலும், இவர்களை பின்தொடர்ந்து காரில் ஒரு கும்பலும் சென்றதாக தெரிகிறது. பாலாஜியின் புகாரின்படி வழக்குபதிவு செய்துள்ள போலீசார் சம்பவத்தில் தொடர்புடையவர்களை மொபைல் எண் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி